நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஃபிஃபா கிளப் அணிகளுக்கான உலக கிண்ண போட்டி: மெஸ்ஸியின் இந்தர் மியாமி அணி சமநிலை 

வாஷிங்டன்: 

ஃபிஃபா கிளப் அணிகளுக்கான உலக கிண்ண போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இந்தர் மியாமி அணி எகிப்து நாட்டின் அல்- அஹ்லி அணியுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. 

இறுதி நிமிடத்தில் மெஸ்ஸியின் தாக்குதல் எதிரணியின் கோல் காவலரால் நிராகரிக்கப்பட்டது. 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்று தொடங்கிய ஃபிஃபா கிளப் அணிகளுக்கான உலக கிண்ண காற்பந்து போட்டியில் உலகம் முழுவதும் உள்ள முன்னணி அணிகள் களம் கண்டுள்ளன 

மற்றொரு ஆட்டத்தில் 2024/2025ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண வெற்றியாளரான PSG அணி, லா லீகா அணியின் ATLETICO MADRID அணியுடன் மோதுகிறது. 

ஃபிஃபா கிளப் அணிகளுக்கான உலக கிண்ண காற்பந்து போட்டி ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியின் இறுதியாட்டம் ஜூலை 13ஆம் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset