நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டோட்டன்ஹாம் புதிய நிர்வாகியை நியமித்தது

லண்டன்:

தற்போதைய பிரான்ட்போர்டு பயிற்சியாளரான தோமஸ் ஃபிராங்க், அணியின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கால்பந்து கிளப் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்ட ஆஞ்ச் போஸ்டெகோக்லோவுக்குப் பதிலாக இவர் மூன்று வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பிரான்ட்போர்டுடனான தனது ஒப்பந்தத்திலிருந்து ஃபிராங்கை விடுவிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இதனால் டோட்டன்ஹாம் சுமார் 10 மில்லியன் டாலரை கூடுதலாக செலுத்தியது.

முன்னதாக ஃபிராங்க் கடந்த 2018 அக்டோபரில் பிரான்ட்ஃபோர்டின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மேலும்  2021 இல் பிரிமியர் லீக்கிற்கு அவ்வணியை உயர்த்த வழிகாட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset