
செய்திகள் விளையாட்டு
தேசிய அளவிலான புட்சால் போட்டியில் புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெண்கள் அணியினர் மகத்தான வெற்றி
ஈப்போ:
தேசிய அளவிலான 12 வயதிற்குட்பட்டோருக்கான புட்சால் போட்டி கெடாவில் நடைபெற்றது. இப்போட்டியில் பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெண்கள் அணி வாகை சூடியது.
பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து இரு பள்ளிகளின் பெண்கள் அணியினர் கலந்துகொண்டனர். அவர்களில் புருவாஸ் தமிழ்ப்பள்ளியும், அரசினர் தமிழ்ப்பள்ளியும் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை கண்டு பெருமிதம் கொள்வதாக இப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இரா.ஜெயசீலன் கூறினார்.
தேசிய அளவில் சுங்கை பட்டாணியில் நடைபெற்ற இப்போட்டியில் பெண்கள் பிரிவில் 12 குழுக்களும் ஆண்கள் பிரிவில் 24 குழுக்களும் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் சுங்கை பட்டாணியின் பழனிச்சாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியை புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளி தோற்கடித்து சாம்பியனானது.
இப்போட்டியில் பெண்கள் பிரிவில் சிறந்த கோல் காவலளராக அரசினர் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த டவிஷா சுரேஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆண்கள் பிரிவில் பேராக்கை பிரதிநிதித்த தெலுக் இந்தான் பாரதி தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:56 am
புளோரியனை 116 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்க லிவா்பூல் ஒப்புதல்
June 13, 2025, 12:23 pm
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு ஏசிமிலான் அணிக்கு லூகா மோட்ரிச் மாறுவார்
June 13, 2025, 12:22 pm
டோட்டன்ஹாம் புதிய நிர்வாகியை நியமித்தது
June 12, 2025, 9:50 am
1,000 கோல்களை நோக்கி ரொனால்டோ: 93.7% நிறைவு செய்துள்ளார்
June 11, 2025, 3:24 pm
வியட்நாமை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடிய ஹரிமாவ் மலாயா அணி: பிரதமர் அன்வார் வாழ்த்து
June 11, 2025, 8:44 am
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: வியட்நாமை வீழ்த்தியது மலேசியா
June 11, 2025, 8:41 am