நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.61 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்: கேஎல்ஐஏ அஞ்சல் மையத்தில் சிக்கியது

சிப்பாங்:

ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.61 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் கேஎல்ஐஏ அஞ்சல் மையத்தில் சிக்கியுள்ளது.

சிலாங்கூர் சுங்கத் துறை இயக்குநர் நோர்லேலா அஸுமி ரம்லி இதனை உறுதிப்படுத்தினார்.

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உள்ள போஸ் மலேசியா அஞ்சல், கூரியர் மையத்தில் சிலாங்கூர் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 2.61 மில்லியன் மதிப்புள்ள 22.3 கிலோ போதைப் பொருட்களை கடத்தும்  முயற்சிகளை அவர்கள் முறியடித்துள்ளனர்.

ஏப்ரல் முழுவதும் நடந்த சோதனைகளில் பெட்டிகள், மெத்தை உறைகள், ஏப்ரான்கள், பொம்மைகள் என பொய்யாக தகவலை கொடுத்து போதைபொருளை கடத்தும் முயற்சிகளை இக்கும்பல் மேற்கொண்டுள்ளது.

 கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக வடக்கு துறைமுக சுங்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் 1952ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset