
செய்திகள் மலேசியா
ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.61 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்: கேஎல்ஐஏ அஞ்சல் மையத்தில் சிக்கியது
சிப்பாங்:
ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.61 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் கேஎல்ஐஏ அஞ்சல் மையத்தில் சிக்கியுள்ளது.
சிலாங்கூர் சுங்கத் துறை இயக்குநர் நோர்லேலா அஸுமி ரம்லி இதனை உறுதிப்படுத்தினார்.
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உள்ள போஸ் மலேசியா அஞ்சல், கூரியர் மையத்தில் சிலாங்கூர் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது 2.61 மில்லியன் மதிப்புள்ள 22.3 கிலோ போதைப் பொருட்களை கடத்தும் முயற்சிகளை அவர்கள் முறியடித்துள்ளனர்.
ஏப்ரல் முழுவதும் நடந்த சோதனைகளில் பெட்டிகள், மெத்தை உறைகள், ஏப்ரான்கள், பொம்மைகள் என பொய்யாக தகவலை கொடுத்து போதைபொருளை கடத்தும் முயற்சிகளை இக்கும்பல் மேற்கொண்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக வடக்கு துறைமுக சுங்க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் 1952ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am