
செய்திகள் மலேசியா
சுங்கைபூலோவில் இரு பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த மக்கள் நட்பு திட்டத்தின் கீழ் 100,000 ரிங்கிட் ஒதுக்கப்படும்: டத்தோ ரமணன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோவில் இரு பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த மக்கள் நட்பு திட்டத்தின் கீழ் 100,000 ரிங்கிட் ஒதுக்கப்படும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இரண்டு இடைநிலைப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் சியராமாஸ் இடைநிலைப்பள்ளி, செக்ஷன் 4 கோத்தா டாமன்சாரா இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இந்நிதி வழங்கப்படும்.
மூடப்பட்ட நடைபாதைகள், புதிய வகுப்பறைகள், சிற்றுண்டி சாலை புதுப்பித்தல், அவசர பராமரிப்பு தேவைப்படும் பிற அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதற்காக தலா 50,000 ரிங்கிட் வழங்கப்படும்.
அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, தற்போதைய கல்வித் தேவைகளுக்கு ஏற்ப, மிகவும் உகந்த மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
சுங்கைபூலோவின் குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெற வேண்டும்.
அவர்களின் பள்ளிகளும் கற்றலுக்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான வசதிகளுடன் பொருத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தின்ஒரு முதலீடாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am
டத்தோக் அப்துல் மாலிக்கிடம் இருந்து உதவி பெறும் வீடியோவை ஜொகூர் போலிஸ் தலைவர் குமார் மறுத்தார்
June 14, 2025, 8:50 pm