
செய்திகள் மலேசியா
டத்தோக் அப்துல் மாலிக்கிடம் இருந்து உதவி பெறும் வீடியோவை ஜொகூர் போலிஸ் தலைவர் குமார் மறுத்தார்
ஜொகூர்பாரு:
டத்தோக் அப்துல் மாலிக்கிடம் இருந்து உதவி பெறும் வீடியோவை ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ குமார் மறுத்துள்ளார்.
தன்னைப் போன்ற ஒரு நபர் டத்தோக் அப்துல் மாலிக் என்பவரிடமிருந்து உதவி பெறுவதைக் காட்டும் டிக்டோக் தளத்தில் வைரலான வீடியோ போலியானது.
அந்த வீடியோ உண்மைக்குப் புறம்பானது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கையாளப்பட்டதாக அவர் கூறினார்.
டத்தோக் அப்துல் மாலிக் என்ற நபரிடமிருந்து உதவி பெறுவதுடன் இணைக்கப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த காணொளி தவறானது.
குறிப்பாக ஆதாரமற்றது என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக ஜொகூர் போலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரிகள் இந்த காணொளியின் நம்பகத்தன்மையை மறுக்கும் அறிக்கையை அளித்துள்ளனர்.
மேலும் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 419 மற்றும் 420/511 மற்றும் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am