நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோக் அப்துல் மாலிக்கிடம் இருந்து உதவி பெறும் வீடியோவை ஜொகூர் போலிஸ் தலைவர் குமார் மறுத்தார்

ஜொகூர்பாரு:

டத்தோக் அப்துல் மாலிக்கிடம் இருந்து உதவி பெறும் வீடியோவை ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ குமார் மறுத்துள்ளார்.

தன்னைப் போன்ற ஒரு நபர் டத்தோக் அப்துல் மாலிக் என்பவரிடமிருந்து உதவி பெறுவதைக் காட்டும் டிக்டோக் தளத்தில் வைரலான வீடியோ போலியானது.

அந்த வீடியோ உண்மைக்குப் புறம்பானது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கையாளப்பட்டதாக அவர் கூறினார்.

டத்தோக் அப்துல் மாலிக் என்ற நபரிடமிருந்து உதவி பெறுவதுடன் இணைக்கப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த காணொளி தவறானது.

குறிப்பாக ஆதாரமற்றது என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக ஜொகூர் போலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரிகள் இந்த காணொளியின் நம்பகத்தன்மையை மறுக்கும் அறிக்கையை அளித்துள்ளனர்.

மேலும் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 419 மற்றும் 420/511 மற்றும் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset