நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்பாலும் பண்பாலும் நிறைந்திருக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்: டத்தோ சரவணன்

கோலாலம்பூர்:

அன்பாலும் பண்பாலும் நிறைந்திருக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

தந்தை என்ற சொல் சொர்க்க சுருதி,
தன் பிள்ளை வாழ்வின் முதல் மறைமொழி.

அன்பாலும், பண்பாலும் நிறைந்திருக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
 
மாதா பிதா குரு தெய்வம் எனும்  சொல்லே, தந்தையின் உயரிய தன்மையையும், அவரது பாத்திரத்தின் புனிதத்தையும் வெளிப்படுத்துகின்றது.  

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதுபோல், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை தரும் வழிகாட்டல், அருமருந்தாகவே அமைகின்றன.

ஒவ்வொரு குடும்பத்தின் வெற்றிக்கும் தந்தையின் பங்கு அளப்பரியது. 

ஒரு குடும்பத்தின் நெடுந்தூர பயணத்துக்கான அடித்தளத்தை அவர் அமைக்கின்றார். 

கடமையுணர்வு, பொறுப்புணர்வு, ஒழுக்கம், உழைப்பு, நம்பிக்கை, நெறி ஆகிய அனைத்தையும் குழந்தைகள் முதல் நோக்கில் தாய் தந்தையைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள்.  

இன்றைய உலகில் குடும்பப் பொறுப்புகள் இணைந்து பகிரப்படும் நிலைக்கு வந்திருந்தாலும், பல குடும்பங்களின் நம்பிக்கையாகவும், பொருளாதாரச் சுமையைத் தோளில் சுமக்கும் ஆதர்சமாகவும் தந்தை தொடர்ந்து திகழ்கிறார்.

தந்தையின் உற்சாகமும் உழைப்பும் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் போய்விடும். 

ஆனால் அவரின் அர்ப்பணிப்புகள் அனைத்தும்,  ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியின் ஆதாரமாக விளங்குகின்றன.

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தந்தை செய்யும் திட்டங்கள்,  உழைப்புகள் எல்லாமே அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.

தந்தையின் நிழலில் நிமிர்ந்த நம் நிமிர்வு, அவரிடமிருந்து வந்த அருள்

இன்றைய இணைய உலகத்தில் பிள்ளைகளிடம் நெருக்கமாகப் பழகுவதற்குத் தந்தையின் மென்மையான அணுகுமுறை அவசியம். 

ஆனால், அவர்களின் வாழ்வில் நெறி நிலைத்திருக்கவும், வழி தவறாமலும், தந்தையின் பரந்த பார்வையும், அவசியமான கட்டுப்பாடுகளும் ஒரு காவல் கோட்டையாக இருக்க வேண்டும்.

எனவே தந்தையர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கவும், அவருடைய வரலாற்றையும் பண்பையும் குழந்தைகளிடம் எடுத்துரைக்கவும், அவர் வயதான காலத்தில் அருகில் நின்று அரவணிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். 

முதியோர் இல்லங்களில் அவர்களைத் தள்ளி வைப்பது ஒரு சமூகத்தின் நெஞ்சை நசுக்கும் செயல்.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset