நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாவா மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும்: கட்சி வேறுபாடின்றி ஒன்றுக் கூடிய தலைவர்கள் சூளுரை

கிள்ளான்:

கம்போங் ஜாவா லோட் 11113இல் வசிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும்.

கட்சி வேறுபாடின்றி ஒன்றுக் கூடிய தலைவர்கள் இவ்வாறு சூளுரைத்தனர்.

கம்போங் ஜாவா லோட் 11113இல் 56 வருடங்களுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 19 நில உரிமையாளர்கள் உள்ளனர். அதே வேளையில் 25 குடும்பங்களும் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் டபிள்யூசிஇ நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனம் வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லாததால் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் வீடுகளை உடைக்க ஒரு சில தரப்பினர் மேற்கொண்ட முயற்சியால் இப்பகுதியில் மிகப்பெரிய சர்ச்சைகள் நடந்தது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாபெரும் கூட்டம் இன்று நடைபெற்றது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களான டத்தோ குணாளன், சிவசுப்பிரமணியம், சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார், வழக்கறிஞர் கெங்காதரன், பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம், சிலாங்கூர் மாநில உரிமை கட்சி தலைவர் செகுப்சேகர் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய இத்தலைவர்கள் கம்போங் ஜாவா மக்களுக்கு நாங்கள் அனைவரும் துணையாக இருப்போம்.

நீதிமன்ற வழக்கு முடியும் வரை இப்பகுதி மக்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது.

அப்படி யாரும் தொந்தரவு செய்தால் இம்மக்களுக்காக நாங்கள் போராடுவோம் என அவர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset