
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான அறிவியல் விழா; பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் விழாவில்
பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வாகை சூடியது.
சிலாங்கூர் மாநில அளவிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா இன்று ஷாஆலம் எமரல்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
அஸ்தி அமைப்பின் ஏற்பாட்டில் இந்த அறிவியல் விழா நடைபெற்றது.
காலை 8 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலத்தில் இருந்து 70 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்டன
குறிப்பாக 350 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.
சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி இப்போட்டியில் அடுத்தத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார், அஸ்தியின் அறிவியல் விழா திட்ட இயக்குநர் சுபாஷ், மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் பாண்டியன் உட்பட பல பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா இன்று 9 மாநிலங்களில் ஒரு சேர நடைபெற்றது.
கிட்டத்தட்ட 400 தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்ப்பள்ளிகள் தேசிய அறிவியல் விழாவில் கலந்து கொள்ளும் என்று சுபாஷ் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில் தொடர்ந்து சிறந்து வழங்குவதற்கு இந்த அறிவியல் விழா முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆக இவ்விழா தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ சங்கர் ஐயங்கார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 3:05 pm
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
June 14, 2025, 2:56 pm
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
June 14, 2025, 2:41 pm