
செய்திகள் மலேசியா
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
கோலாலம்பூர்:
ஏர் ஆசியாவில் பயணம் மேற்கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு வழங்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
ஆசியாவிலுள்ள 57 இடங்களுக்குப் பயணம் செய்ய மலேசிய ஊடகவியலாளர்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டையை கொண்டிப்பவருக்கு இந்த 50% கழிவு வழங்கப்படும் என்று இன்று நடந்த தேசிய ஊடகவியாளர்கள் நாள் நிகழ்ச்சியில் ஏர் ஆசியா தலைவர் டோனி ஃபாண்டெஸ் முன்னிலையில் ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார்.
மேலும், தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கும் ஏர் ஆசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தச் சலுகை வழங்கப்படுவதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
இந்தச் சலுகை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஏர் ஆசியா நிறுவனத்திற்கு ஃபஹ்மி நன்றி தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இந்தச் சலுகை வழங்கப்படுவதை ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், ஆசியான் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் வழிவகுப்பதாகப் ஃபஹ்மி குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஊடகவியலாளர்கள் இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 3:05 pm
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
June 14, 2025, 2:41 pm