
செய்திகள் மலேசியா
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூன் 14 –
நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு இலக்கவியல் (டிஜிட்டல்) உருமாற்றத்தை செயல்படுத்துவதிலும், உள்ளடக்க உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் உதவுவதற்காக அரசாங்கம் RM30 மில்லியனை ஒதுக்கியுள்ளது என பிரதமர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊடகவியலாளர்கள் நாள் (HAWANA) விழா இன்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள உலக வர்த்தக மையம் (WTC) மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை வகித்தார். தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
முன்னதாக ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கிய நிதியில் இதுவே அதிகமானது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். “உண்மையும் நிலைத்தன்மையும் ஊடகத்தின் கருப்பொருள் ஆக இருக்க வேண்டும்” என அன்வார் வலியுறுத்தினார்.
அதோடு செயற்கை நுண்ணறிவை (AI) புரிந்துகொண்டு, கால மாற்றத்திற்கு ஏற்ப ஊடகம் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 2:56 pm
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
June 14, 2025, 2:41 pm