நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடி போட்டியில் வெல்லும் அணிகள் தேசிய கபடி போட்டியில் களமிறங்கும்: பீட்டர்

கோலாலம்பூர்:

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடி போட்டியில் வெல்லும்  அணிகள் தேசிய கபடி போட்டியில் களமிறங்கும்.

மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் பத்மநாதன் என்ற பீட்டர் இதனை கூறினார்.

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவுடம் மலேசிய கபடி சங்கம் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

ஆண், பெண் இரு பிரிவுகளிலும் தலா 11 அணிகள் இப்போட்டியில் களமிறங்கி உள்ளது.

பள்ளி மாணவர்களிடையே கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கபடி போட்டி நடத்தப்படுகிறது.

அதே வேளையில் தேசிய அளவிலான கபடி போட்டி விரைவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளும் சிறப்பு  தேர்வு பெறும் போட்டியாளர்களும் தேசிய போட்டியில் களமிறங்குவார்கள்.

இதன் மூலம் அவர்கள் தேசிய போட்டியிலும் பிற்காலத்தில் நாட்டை பிரதிநிதித்தும் விளையாடுவார்கள்.

இது தான் மலேசிய கபடி சங்கத்தின் இலக்கு என்று பீட்டர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset