நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: மரணமடைந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் கூடுதல் நிதி 

கோலாலம்பூர்: 

கிரிக் சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 உப்சி மாணவர்கள் மரணமடைந்த வேளையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் சொன்னார். 

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மடானி அரசாங்கத்தின் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார். 

பலியான மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் வேளையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இதர மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் வழங்க பிரதமர் அன்வார் இணக்கம் தெரிவித்தார். 

மேலும், மரணமடைந்த மாணவர்களின் பிடிபிடிஎன் கல்வி கடனுதவி யாவும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset