நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் சங்கிலி, தங்க மோதிரம் காணவில்லை: விசாரணை கோரும் குடும்பத்தினர்

கெமாமான்:

போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் சங்கிலி, தங்க மோதிரம் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் விசாரணை கோரியுள்ளனர்.

கடந்த மார்ச் 16 அன்று திரெங்கானுவில் சான் வெய் ஹான் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்டவரின் தங்க சங்கிலி, தங்க மோதிரத்தை காணவில்லை.

இது குறித்து மேல் விசாரணைகளை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் போலிஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வெய் சுவான் கூறினார்.

வரி செலுத்துவோர் பணத்தில் தான்  போலிசார் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் வெய் ஹானின் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம் கேட்டதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset