நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலை கட்டுமான நிதி மோசடி: டான்ஸ்ரீயிடமிருந்து எம்ஏசிசி வாக்குமூலம் பெற்றது

கோலாலம்பூர்:

நெடுஞ்சாலை கட்டுமான நிதி மோசடி தொடர்பிலான டான்ஸ்ரீயிடமிருந்து எம்ஏசிசி வாக்குமூலம் பெற்றது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக சுகுக் நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட டான்ஶ்ரீயிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில்  தலைநகரில் உள்ள டான்ஸ்ரீயின் வீட்டில் எம்ஏசிசியின் இரண்டு விசாரணை அதிகாரிகள் இந்த செயல்முறையை மேற்கொண்டனர்.

மேலும் மலாக்காவில் உள்ள டான் ஸ்ரீயின் வீட்டிலும் எம்ஏசிசி சோதனை நடத்தியது. ஆனால் எந்த பறிமுதலும் செய்யப்படவில்லை என்றும் எம்ஏசிசி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீயிடமிருந்து எம்ஏசிசி வாக்குமூலம் பெறும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset