செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சிவன் கோயில் குடமுழுக்கு விழா சீராக நடைபெற்றது: அமைச்சர் சண்முகம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இந்து கோவில்கள் முறையாகச் செயல்பட இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை வாரியமும் ஆற்றும் பங்கை உள்துறை, தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு கா சண்முகம் பாராட்டியிருக்கிறார்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக டோபி காட் (Dhoby Ghaut) பகுதியில் இருந்த ஸ்ரீ சிவன் கோயிலுக்குச் சிங்கப்பூர் இந்தியர்களின் மனத்தில் சிறப்பு இடமுள்ளது என்றார் அவர்.
விழா கோலாகலமாகவும் சீராகவும் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை வாரியமும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததை அவர் குறிப்பிட்டார்.
குடமுழுக்கு விழாவில் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2,500 தொண்டூழியர்கள் குடமுழுக்கு விழாவில் சேவையாற்றுகின்றனர். சிங்கப்பூரில் இருக்கும் மற்ற ஆலயங்களிலிருந்தும் தொண்டூழியர்கள் வந்து உதவியதாக அமைச்சர் சொன்னார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
