நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒவ்வொரு ஏழு நிமிடத்துக்கும் ஒரு தாய் உயிரிழக்கிறார் : நைஜீரியாவில் அச்சுறுத்தும் அளவில் மகப்பேறு மரணங்கள் அதிகரிப்பு

அபுஜா: 

நைஜீரியாவில் பிரசவத்தின் போது ஆண்டுக்கு சுமார் 75,000 பெண்கள் மரணத்தை எதிர்கொள்வதாக தாய்மை & இனப்பெருக்கம் சார்ந்த சுகாதார கூட்டமைப்பு, MRHC தெரிவித்துள்ளது.

MRHC, லாகோஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட 'மாமா பேஸ்' (MamaBase) என்ற ஆய்வின் மூலம், 2023-ஆம் ஆண்டில் 75,000 மகப்பேறு மரணங்கள் பதிவாகியிருப்பதைச் சுட்டிக் காட்டியது. 

உலகளவில் சுமார் 28.7% மகப்பெறு மரணங்கள் நைஜீரியாவில் பதிவு செய்யப்படுவதாக MRHC-வின் தரவுகள் காட்டுகின்றன. 

நைஜீரியாவில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு அங்கு அவசர சிகிச்சை வசதிகளும் குறைவாக உள்ளன.

இது மகப்பேறு மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நைஜீரியாவில் சட்டப்படி கருக்கலைப்பு கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பெண்கள் பாதுகாப்பற்ற முறைகளில் கருக்கலைப்பை மேற்கொள்கிறார்கள்.

40% விழுக்காடு மகப்பேறு மரணங்களுக்குப் பாதுகாப்பற்ற முறைகளில் கருக்கலைப்பு நடவடிக்கையே காரணமாகும். 

மகப்பேறு சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நைஜீரியாவில் குறைவாக உள்ளதாலும் அங்கு மகப்பேறு மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset