
செய்திகள் உலகம்
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
புனித மக்கா:
ஹஜ் கடமையின் முக்கிய அம்சமான அரஃபா பெருவெளியை நோக்கி கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் நகரத் தொடங்கி உள்ளனர்.
இஸ்லாத்தின் ஐந்தாவது, இறுதி கடமையாக ஹஜ் யாத்திரை விளங்குகிறது.
இந்த புனிதப் பயணத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இன்று அரஃபாவிற்கு செல்லத் தொடங்குகின்றனர்.
அங்கு வெப்பம் அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸாக உயரத் தொடங்கியதை பொருட்படுத்தாமல் யாத்திரீகர்கள் தங்களை கடமை நிறைவேற்ற தொடங்கி உள்ளனர்.
இன்று காலை முதலே ஹாஜிகள் படிப்படியாக பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முஸ்லிம்கள் நாளை (9 ஜுல்ஹிஜ்ஜா) அரஃபாவில் நின்று, சூரிய அஸ்தமனம் (ஜுஹுர்) தொடங்கி தியாகப் பெருநாள் இரவில் விடியற்காலை (சுபுஹ்) வரை அங்கு தங்கி இருந்து இரவைக் கழிப்பார்கள்.
அரஃபாவில் நின்று மனமுருகப் பிரார்த்திப்பார்கள். தொடர்ந்து முஸ்தலிஃபா, மினாவில் செய்ய வேண்டிய அமல்களை செய்வார்கள்.
அத்துடன் நாளை தொடங்கி 12 ஜுல்ஹிஜ்ஜா (ஜூன் 8) வரை மூன்று ஜம்ராக்களிலும் கற்கள் எறியப்படும்.
வெப்பமான வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, இறைவழிபாட்டுப் பயணத்தில் ஹாஜிகள் தங்களை ஆன்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையான முன்னேற்பாடுகளுடன் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய உச்ச வெப்பநிலை பிற்பகல் 3 மணியளவில் 45 டிகிரி செல்சியஸை எட்டியது.
ஹஜ் யாத்திரையின் உச்ச நாட்களில் பல அதிகபட்சமாக 40 முதல் 48 டிகிரி செல்சியஸை எட்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா & பார்த்திபன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 3:55 pm
யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm