நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்திற்குள் மின்னியல் சிகரெட்டைக் கொண்டு சென்றால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்

பேங்காக்:

தாய்லாந்திற்குள் மின்னியல் சிகரெட்டைக் கொண்டு சென்றால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தாய்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் வேப் எனப்படும் மின்னியல் சிகரெட்டுகளைக் கொண்டு சென்றால் அவர்கள் கைது செய்துப்படுவார்கள்.

அதன் பின் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைக்கு அவர் உட்படுத்தப்படுவார்கள் என்றும் தாய்லாந்து அரசு குறிப்பிட்டது. 

மேலும், மின்னியல் சிகரெட் வைத்திருந்ததாக, தாய்லாந்து சுங்கச் சட்டத்தின் கீழ் வரி உட்பட பொருட்களின் மதிப்பை விட நான்கு மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொது இடத்தில் மின்னியல் சிகரெட் பயன்படுத்திய குற்றத்திற்காக, தாய்லந்ந்தின் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, குற்றவாளிகளுக்கு 5,000 பாட், அதாவது RM650 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset