நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?

லாகூர்:

சீக்கிய மதகுரு அர்ஜன் தேவின் நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்க லாகூருக்கு வருமாறு இந்தியா உள்பட பல்வேறு நாட்டு சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை ரத்து செய்துவிட்டுள்ள இந்தியா இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்று இதுவரை அறிவிக்கவில்லை.

சீக்கிய மதகுரு அர்ஜன் தேவின் நினைவு தினம் ஜூன் 16,  மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு தினம் 29 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.

லாகூரில் உள்ள இவர்கள் இருவரின் நினைவிடங்களான குருத்வாரா தேரா சாஹிப், மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோரின் நினைவு தினங்களில் கடந்த ஆண்டு 1,500 இந்திய சீக்கியர்கள் பங்கேற்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset