நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

யமாலை வளர விடுங்கள்; அழுத்தம் கொடுக்க வேண்டாம்: ரொனால்டோ

லிஸ்பன்:

நாளை நடைபெற உள்ள ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் போர்த்துகல், ஸ்பெயின் அணிகள் விளையாட உள்ளன. 

இந்நிலையில், ஸ்பெயின் அணியின் 17 வயது இளம் வீரர் லாமின் யமால் குறித்து போர்த்துகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியுள்ளார்.

'ரொனால்டோ vs யாமல்’ என இப்போது இந்த ஆட்டம் குறித்த ஹைப் உருவாக்கப்பட்டு உள்ளது. 

இருவரும் தங்கள் அணிக்காக இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கோல் பதிவு செய்தனர். 

போர்த்துகல் ஜெர்மனியையும், ஸ்பெயின் பிரான்ஸ் அணியையும் அரையிறுதியில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகத்தின் சிறந்த தேசிய கால்பந்து அணியாக ஸ்பெயின் உள்ளது. விளையாட்டில் ஒரு தலைமுறையை சேர்ந்த வீரர் வருவதும், மற்றொரு தலைமுறையை சேர்ந்தவர் இந்த மேடையை விட்டு வெளியேறுவதும் வழக்கம். 

நீங்கள் என்னை மற்றொரு தலைமுறையை சேர்ந்தவராக பார்த்தால் எனக்கு பராவாயில்லை.

ஊடகத்தில் எப்போதும் ஹைப் ஏற்றுவார்கள். அது ரொனால்டோ, வேறொருவர் என சொல்வார்கள். 

ஆனால், என்னை பொறுத்தவரை எப்போதுமே இரு அணிகளுக்கு இடையில் தான் ஆட்டம். 

லாமின் யமால் குறித்து அதிகம் பேசுகிறீர்கள். அது சரிதான். ஏனெனில், அவர் சிறந்த வீரர். தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 

ஆனால், நான் ஸ்பெயின் அணி குறித்து பேச விரும்புகிறேன்.

அந்த அணியில் நிக்கோ வில்லியம்ஸ் உள்ளார், சிறந்த மிட்ஃபில்டர் பெத்ரி உள்ளார்.

அதோடு அணியின் பயிற்சியாளராக லூயிஸ் உள்ளார். இப்படி அந்த அணி மிக வலுவாக உள்ளது.

யமால் இளம் வீரர். அவரை வளர விடுங்கள். தேவையற்ற அழுத்தம் அவருக்கு கொடுக்க வேண்டாம். அவரது ஆட்டம் இன்னும் மேம்படும். 

அவரது இயல்பில் வளர்ந்து, தனது ஆட்டத்திறனை அனுபவிக்க விடுங்கள். அதுதான் கால்பந்துக்கு நல்லது என்று ரொனால்டோ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset