நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 

இந்தியாவுடன் சண்டையில் தனது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துரைக்க அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு குழுக்களை பாகிஸ்தான் அனுப்பியது.

இந்தியாவும் 33 நாடுகளுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்.பி.க்கள் குழுக்களை அனுப்பியது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் ஏற்பட்ட சண்டையில் பாகிஸ்தானின்  நிலைப்பாட்டை எடுத்துரைக்க 2 குழுக்களை 4 நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக அந் நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமை தாங்குகிறார். அதில் பல்வேறு கட்சியினர் அடங்கிய 9 பேர் உள்ளனர்.

ஜூன் 2 முதல் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், பிரிட்டன் தலைநகர் லண்டன், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸில்ஸுக்கு பயணிக்கின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset