நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மங்கோலியா நாட்டு பிரதமர்  Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார் 

உலான்பதார்: 

மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene தான் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அவர் இன்று அறிவித்தார். 

மங்கோலியா நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகினார். 

இவ்வேளையில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. இது தனக்கு மிகப்பெரிய மரியாதைக்குரிய ஒன்றாகும் என்று Luvsannamsrain Oyun-Erdene கூறினார். 

இந்நிலையில் மங்கோலியா நாட்டு இடைக்கால பிரதமர் Oyun செயல்படுவார் என்றும் அடுத்த பிரதமர் இன்னும் 30 நாட்களில் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

முறையற்ற நிர்வாகம், ஊழல், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் அழுத்தம் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset