நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் இன்று அதிபர் தேர்தல்: புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்கின்றனர்

சியோல்: 

தென்கொரியாவில் இன்று ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தென்கொரியாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்குப் பிறகு இந்த அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. 

உள்ளூர் நேரப்படி இன்று காலை 6 மணி முதல் மூத்த குடிமக்கள் யாவரும் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்றனர். 

முன்னாள் அதிபர் YOON SUK YEOL கொண்டு வந்த இராணுவ சட்டம் காரணமாக தென்கொரியாவில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. 

தென்கொரியா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக LEE JAE MYUNG, மக்கள் அதிகார கட்சி சார்பாக KIM MOON SOO போட்டியிடுகின்றனர். 

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset