
செய்திகள் விளையாட்டு
நண்பருடன் இணைந்து கால்பந்து கிளப்பை தொடங்கிய மெஸ்சி
நியூயார்க்:
பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி தனது நண்பர் லூயிஸ் சுவாரஸ் உடன் இணைந்து புதிய கால்பந்து கிளப்பை தொடங்கியுள்ளார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, உருகுவே நாட்டைச் சேர்ந்த லூயிஸ் சுவாரஸ் இருவரும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்.
பார்சிலோனா அணியைவிட்டுப் பிரிந்த இருவரும் தற்போது இந்தர்மியாமி அணிக்காக ஒன்றாக விளையாடி வருகிறார்கள்.
களத்தில் மட்டுமே நண்பர்களாக இருந்த இவர்கள் தற்போது தொழிலும் பார்ட்னராக மாறியுள்ளார்கள்.
உருகுவேயில் எல்எஸ்எம் என்ற நான்காம் டிவிஷன் கால்பந்து கிளப்பை உருவாக்கியுள்ளார்கள்.
டிபார்டிவோ எல்எஸ் என்ற கனவு 2018இல் தொடங்கியது. இதில் 3,000க்கும் அதிகமானோர்கள் இதில் இணைந்துள்ளார்கள்.
நான் வளர்ந்து பிறந்த உருகுவே நாட்டில் ஆர்வமுள்ள இளம் கால்பந்து வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்கவே இதைத் தொடங்கினேன் என்று சுவாரஸ் கூறினார்.
என்னைத் தேர்ந்தெடுத்ததிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் படுகிறேன்.
இதில் உன்னுடன் எல்லாவற்றிலும் உடனிருந்து வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று மெஸ்சி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am