
செய்திகள் விளையாட்டு
பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிப் பேரணியில் பங்கேற்ற 11 பேர் உயிரிழந்தனர்: ஜவாஹிருல்லா இரங்கல்
சென்னை:
பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிப் பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடுகின்ற வகையில் கர்நாடக மாநிலத் தலைநகரில் வெற்றி பேரணி நடைபெற்றிருக்கிறது. கூட்ட நெரிசல் காரணமாக 13 பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
முற்றிலும் வணிக நோக்கில் நடத்தப்படும் இந்த விளையாட்டுக்கு அதீத முக்கியத்துவம் ஊடகங்களால் வழங்கப்பட்டு வருகிறது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த கோப்பையை பெங்களூரு அணி வென்றதன் தொடர்ச்சியாக உடனே இரவில் வெற்றி கொண்டாட்டம் ஏற்பாடு செய்தது மிகப்பெரிய தவறு. உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்வதற்கான அவகாசம் இல்லாத சூழ்நிலையில் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. இதற்கு முழுக்க முழுக்க ஆர் சி பி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற்று திரும்ப பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 11:20 am
பிரிட்டன் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி தோல்வி
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am