நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி அரேபிய கிளப்பின் 1.5 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தத்தை புருனோ பெர்னாண்டஸ் நிராகரித்துள்ளார்

முனிச்:

சவூதி அரேபிய கிளப்பின் 1.5 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தத்தை புருனோ பெர்னாண்டஸ் நிராகரித்துள்ளார்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவராக புருனோ பெர்னாண்டஸ் விளங்குகிறார்.

இவரை ஒப்பந்தம் செய்ய சவூதி அரேபியாவில் அல் ஹிலால் கிளப் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கிட்டத்தட்ட 1.5 பில்லியன் ரிங்கிட் சம்பளம் கொடுக்கவும் அக்கிளப் முன்வந்துள்ளது.

ஆனால் அவர் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளார்.

இதனால் சவூதி அரேபியாவின் லாபகரமான சலுகையை அவர்  நிராகரித்துள்ளார்.

மேலும் உயர்ந்த மட்டத்தில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகக் கூறினார்.

அல் ஹிலால் கிளப்பிடம் இருந்து ஒரு சுவாரஸ்யமான சலுகை பெற்றேன்.

ஆனால் ஓல்ட் டிராப்போர்டில் ரூபன் அமோரிமின் மறுகட்டமைப்பு செயல்பாட்டில் ஒரு பகுதியாக இருக்க தாம் அதை நிராகரித்ததாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset