
செய்திகள் விளையாட்டு
18 ஆண்டு காலக் கனவு: முதல் முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாதனை படைத்தது
அஹமதாபாத்:
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகக் கிண்ணத்தை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாதனை படைத்தது.
நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 191 ரன் எடுத்தால் கிண்ணத்தை வெல்லலாம் என்ற நிலையில் பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அதன் பின் களமிறங்கிய இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்று தனது முதல் கிண்ணத்தை வென்றூ சாதனை படைத்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 10:10 am
ஐபிஎல் சாம்பியன் RCB அணிக்கு எதிராக போலீஸ் புகார்: பெங்களூரு போலீஸ் நடவடிக்கை
June 6, 2025, 9:56 am
ஐரோப்பிய தேசிய லீக் இறுதியாட்டத்தில் போர்த்துகல் - ஸ்பெயின் மோதல்
June 5, 2025, 10:26 am
சோன் இயோங் மின் டோட்டன்ஹாம் கிளப்பை வெளியேறவுள்ளார்?
June 5, 2025, 10:25 am