நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி 

கூச்சிங்: 

அனைத்துலக வாணிப, முதலீட்டு, வர்த்தக அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸின் பதவி விலகல் கடிதத்தைத் தாம் பெற்றுக்கொண்டதாக அம்னோ கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி உறுதிப்படுத்தினார். 

நேற்றிரவு தான் தேசிய முன்னணியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணையவுள்ளதாக தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் சமூக ஊடகங்களின் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

தெங்கு ஸப்ருல் பிகேஆர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தம்மிடம் குறிப்பிட்டதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹித் ஹமிடி சொன்னார். 

முன்னதாக, தெங்கு ஸப்ருல் தேசிய முன்னணியிலிருந்து விலகிய நிலையில் தற்போது வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று அம்னோவின் அக்மால் சலே  கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset