நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜார்ஜ்டவுன் நகரை சுற்றியுள்ள ஐந்து முதன்மை சாலைகள் காத்திருப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படவில்லை

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜார்ஜ்டவுன் நகரைச் சுற்றியுள்ள ஐந்து முதன்மை சாலைகள் இனி காத்திருப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படாது என்று பினாங்கு நகர மன்றம் முகநூல் பதிவில் தெரிவித்தது. 

இந்த புதிய விதிமுறை நாளை ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது. 

ஜார்ஜ்டவுனில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அது கூறியது. 

JALAN AHMAD முதல் JALAN JELUTONG வரையிலும் JALAN AHMAD NOR முதல் JALAN BUKIT DUMBAR ஆகிய சாலை பகுதிகளிலும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது. 

சாலையின் வாகன நிறுத்துமிட பகுதிகளில் காத்திருப்புக்காக  வாகனங்களை நிறுத்தும் தரப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று MBPP எச்சரிகை விடுத்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset