நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கப் பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு பதிவு செய்வதற்கு ஜூன் 14ஆம் தேதி இறுதி நாளாகும்: குணராஜ்

செந்தோசா:

அரசாங்கப் பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு பதிவு செய்வதற்கு ஜூன் 14ஆம் தேதி இறுதி நாளாகும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்  இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கத்தில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளின் சிறப்பு கல்விக் கண்காட்சி செந்தோசாவில் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 12 கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் இங்கு வந்து பயனடைந்துள்ளனர்.

எஸ்பிஎம் தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும்.

ஆனால் இந்த தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து நிற்பார்கள்.

குறிப்பாக அவர்கள் வேலை வாய்ப்புகளை தேடி சென்று விடுவார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கிலே இந்த கல்வி கண்காட்சி நடத்தப்பட்டது.

தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் கவலைப்பட வேண்டாம்.

அவர்களும் தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள பல கல்வி வாய்ப்புகள் உள்ளன.

இந்த வாய்ப்புகள் இந்திய மாணவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். இந்த வாய்ப்புகளை அவர்கள் தேடிச் செல்ல வேண்டும்.

குறிப்பாக அரசாங்க பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு பதிவு செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 14ஆம் தேதியாகும்.

ஆக மாணவர்கள் அதற்குள் சிறந்ததொரு முடிவை எடுக்க வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset