நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு ஸஃப்ருல் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரா? ஆருடங்களை மறுத்தார் டத்தோஶ்ரீ அமீருடின் ஷாரி 

பெட்டாலிங் ஜெயா: 

அனைத்துலக வாணிப, முதலீட்டு, தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் சிலாங்கூர் மாநில பெசாராக நியமிக்கப்படுவார் என்று வெளிவந்திருக்கும் ஆருடங்களை டத்தோஶ்ரீ அமீருடின் ஷாரி மறுத்துள்ளார். 

தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் மாநில சட்டமன்ற உறுப்பினராக இல்லை. மாறாக சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு அதன் தவணைக்காலம் முடிவடைய இரண்டரை ஆண்டுகள் உள்ளதாக அவர் கூறினார். 

சிலாங்கூர் மாநில மேம்பாட்டிற்காக நடப்பு மாநில அரசாங்கம் செயலாற்றி வருகிறது. மந்திரி பெசாரை மாற்றும் நடவடிக்கைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் சொன்னார். 

முன்னதாக, தேசிய முன்னணியில் இருந்து தாம் விலகுவதாக தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் அறிவித்த நிலையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக அவர் வலம் வருவார் என்று ஆருடங்கள் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset