
செய்திகள் மலேசியா
உணவகத் துறைக்கு சிறப்பு மானிய விலையில் கேஸ் திட்டம் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்: பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி கோரிக்கை
கோலாலம்பூர்:
உணவகத் துறைக்கு சிறப்பு மானிய விலையிலான கேஸ் (சமையல் எரிவாயு) திட்டத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இக் கோரிக்கையை முன்வைத்தார்.
உணவகத் துறைக்கு மானிய விலையிலான கேஸ் விநியோகத்தை நிறுத்தும் முடிவில் அரசாங்கம் உள்ளது.
இந்த திட்டத்ததை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு நியாயமான கால அவகாசத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியையும் திடீர் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற தாக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதேவேளையில் உணவகத்துறை தொடர்பான எந்தவொரு முக்கிய முடிவுகளும் சங்கத்துடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட வேண்டும். இது தேவையில்லாத சர்ச்சைகள் பிரச்சினைகளை தவிர்க்கும்.
அதனால் உணவகத் துறைக்கு சிறப்பு மானியத்திலான கேஸ் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும்.
பிரெஸ்மாவின் இக் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது, வணிக இயக்கச் செலவுகளும் அதிகரிக்கும்.
இதனால் எந்தவொரு வர்த்தகரும் தங்கள் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க விரும்ப மாட்டார்கள்.
ஆக விற்கப்படும் உணவு, பானங்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் நாட்டில் நேரடி தாக்கத்தைக் காணலாம் என்று அவர் கூறினார்.
முன்னதாக, உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கைச் செலவின் அமைச்சு சமையல் எரிவாயு சோதனை திட்டத்தை செயல்படுத்தியது.
இது வீடுகள், வணிகர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் மானிய விலையிலான கேஸ் நிலை குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 2:55 pm
அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை: பிரதமர்
June 1, 2025, 2:53 pm
புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்: பிரதமர்
June 1, 2025, 2:47 pm
பத்துகாஜாவில் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்ட தாய்சேய் கிளினிக் அவசியமாகிறது: சிவக்குமார்
June 1, 2025, 2:45 pm
மலேசிய மாணவர்கள் ஜப்பானிய பணி கலாச்சாரத்தைப் படிக்க வேண்டும்: ஃபஹ்மி
June 1, 2025, 2:44 pm