நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

இக்லாஸ் சுங்கை பூலோ திட்டத்தின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்.

சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

சுங்கைபூலோ மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதில் முழு உறுதிப்பாட்டை நான் கொண்டுள்ளேன்.

அடிப்படை உணவு கூடை திட்டங்கள், இலவச சுகாதார சேவைகள், வீடு பழுது பார்ப்பு, பேரிடர் நிவாரணம், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், சூராவ்கள், சீன ஆலயங்களுக்கான நிதி, கல்வி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மக்கள் பிரதிநிதியின் பணி என்பது மக்களவையில் மட்டுமல்ல. சமூகத்தின் மத்தியில் இருப்பதும், அவர்களின் பிரச்சினைக்கு நேரடி தீர்வு கொடுப்பதாகும்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையமும் மலேசிய கூட்டுறவு ஆணையமும் இணந்து யூஐடிஎம் சுங்கைபூலோ மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி நன்கொடையை வழங்கியது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய கூட்டுறவு ஆணையத்தின் சமூக கடப்பாட்டு இக்லாஸ் சுங்கை பூலோ முயற்சியின் கீழ் மருத்துவமனையின் அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்ஸாத்  இஸ்மாயிலிடம் இந்த சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

உள்ளூர் மக்களின் நலன், ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மருத்துவ முன்னணியில் இருப்பவர்களின் அர்ப்பணிப்புக்கு எனது பாராட்டுகள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset