நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரை சாடுவதுடன் கெஅடிலானை அம்னோ எச்சரிக்க வேண்டும்: புவாட்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சாடுவதுடன் கெஅடிலானுக்கு உரிய எச்சரிக்கை அம்னோ விடுக்க வேண்டும்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமத் புவாட் ஷர்காசி இதனை வலியுறுத்தினார்.

தெங்கு ஸப்ருல் அப்துல் ஹஜிஸின் விண்ணப்பத்தை கெஅடிலான் இறுதியாக ஏற்றுக் கொண்டது.

இதன் அடிப்படையில் அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அம்னோ கண்டிக்க வேண்டும்.

அம்னோ உச்சமன்ற கூட்டம் விரைவில் நடைபெறும். அக்கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்ப நான் முடிவு செய்துள்ளேன்.

அம்னோவை விட்டு வெளியேறும் முடிவை அறிவிப்பதற்கு முன்பு தெங்கு ஸப்ருலுக்கும் கெஅடிலானுக்கு இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக நான் நம்புகிறேன்.

தெங்கு ஸப்ருலின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், 

அம்னோ கெஅடிலான் மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும். 

இந்த விவகாரத்தில் அம்னோ வருத்தப்படுவதாகக் கூறுவது மட்டும் போதாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset