
செய்திகள் உலகம்
ஜெர்மனியில் கத்திக்குத்துக்கு இலக்கான 17 பேர்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஹம்பர்க்:
ஜெர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் குறைந்தது 17 பேரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 வயது சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் மலேசிய நேரப்படி பின்னிரவு 12 மணிக்கு நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.
தாக்குதலுக்குப் பிறகு ஜெர்மனியின் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) ஹம்பர்க் மேயருடன் பேசியபோது தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
"பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நான் ஆறுதல் கூறினேன்" என்றார் மெர்ஸ்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
May 24, 2025, 10:50 am
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கான தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது
May 24, 2025, 10:43 am
வங்கதேச தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் ராஜினாமா?
May 22, 2025, 7:31 pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
May 22, 2025, 12:29 pm
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
May 22, 2025, 12:10 pm