செய்திகள் தமிழ் தொடர்புகள்
தொடரும் கன மழை: நீரில் தத்தளிக்கிறது சென்னை
சென்னை:
சென்னையில் புதன்கிழமை இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருமாறி வியாழக்கிழமை மாலை காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.
சென்னையில் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.
ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 8:58 pm
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி தேர்வு
September 18, 2024, 2:17 pm
இண்டியா கூட்டணி பந்த்தினால் புதுச்சேரி வெறிச்சோடியது
September 17, 2024, 6:21 pm
பெரியாரின் பிறந்த நாளையொட்டி பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை
September 16, 2024, 4:30 pm
முதல்வர் ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
September 15, 2024, 10:18 pm
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்
September 14, 2024, 4:26 pm
வக்பு வாரிய சட்ட மசோதாவிற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் திருமாவளவன் ஆட்சேபனை
September 14, 2024, 8:42 am
‘ஆட்சியில் உள்ளவர்களிடம் கோரிக்கை வைத்தால் அவமானப்படுத்தப்படுகின்றனர்’: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்
September 12, 2024, 9:40 pm