
செய்திகள் மலேசியா
ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு 6 நெடுஞ்சாலைகள், 25 முதன்மைகள் சாலைகள் மூடப்படவுள்ளது
கோலாலம்பூர்:
ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 6 நெடுஞ்சாலைகள், 25 முதன்மை சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படும் என்று புக்கிட் அமான் சாலை போக்குவரத்து அமலாக்க பிரிவு தெரிவித்தது.
ஆசியான் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து அமலாக்க பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படும்.
குறிப்பாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூரில் உள்ள KLCC நோக்கி செல்லும் சாலைகள் யாவும் மூடப்படும்.
சாலை போக்குவரத்து சூழலைச் சமாளிக்க 789 போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்படுவார்கள் என்று யுஸ்ரி தெரிவித்தார்.
சாலை பயனர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 10:46 am
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
June 1, 2025, 10:07 am
புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்
June 1, 2025, 10:02 am
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm