
செய்திகள் மலேசியா
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
கோலாலம்பூர்:
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் முஹம்மது அலி இதனை கூறினார்.
மசீச தலைவர் வீ கா சியோங் கேஸ் புதிய விதிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டி கடுமையாக சாடியுள்ளார்.
எல்பிஜி மானியக் கசிவைத் தடுக்க மே 1 முதல் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்பட்ட ஓப்ஸ் காசாக், விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961, விலைக் கட்டுப்பாடு, இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (திருத்தம்) 2021 ஆகியவற்றின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக அர்மிசான் கூறினார்.
42 கிலோவுக்கு மேல் எல்பிஜி பயன்படுத்தும் எந்தவொரு தரப்பினரும் திட்டமிடப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வீ கா சியோங் அமைச்ச்சரவையில் இருந்தபோதுதான் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm