
செய்திகள் மலேசியா
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
கோலாலம்பூர்:
தெங்கு ஸப்ருல் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இதனால் தேர்தல் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.
தெங்கு ஸப்ருல் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
காரணம் அவர் போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. எனவே அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது.
தெங்கு ஸப்ருல் செனட்டராக இருந்ததால் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தெங்கு ஸப்ருல் தேர்தலில் வெற்றி பெறாததால், அது ஒப்பந்தத்தின் நோக்கத்தில் சேர்க்கப்படவில்லை.
அது மக்கள் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் உறுதிமொழி என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm