
செய்திகள் மலேசியா
ஒன்பது சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் நிதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்
பெட்டாலிங் ஜெயா:
கடந்த வாரம் ஒன்பது சேமப்படை அதிகாரிகள் உட்படுத்திய சாலை விபத்தில் அவர்களின் மரணத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார்.
தனக்கு எதிராக விதிக்கப்பட்ட ஜாமின் தொகை செலுத்தப்பட்ட நிலையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
லாரி ஓட்டுநரின் முதலாளி இந்த பணத்தைச் செலுத்தியதாக ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறை தலைவர் பக்ரி சைனால் அபிடின் கூறினார்.
தனி நபர் உத்தரவாதத்தின் பேரில் 6 ஆயிரம் ரிங்கிட் பிணைத்தொகையுடன் கூடிய ஜாமின் அளிக்கப்பட்டது.
முன்னதாக, ஒன்பது சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்குக் காரணமானதாக குற்றஞ்சாட்டப்பட்ட 45 வயதான ருடி சுல்கர்னாயின் தனது குற்றத்தை மறுத்து விசாரணை கோரியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 10:46 am
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
June 1, 2025, 10:07 am
புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்
June 1, 2025, 10:02 am
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm