நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒன்பது சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் நிதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் 

பெட்டாலிங் ஜெயா: 

கடந்த வாரம் ஒன்பது சேமப்படை அதிகாரிகள் உட்படுத்திய சாலை விபத்தில் அவர்களின் மரணத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். 

தனக்கு எதிராக விதிக்கப்பட்ட ஜாமின் தொகை செலுத்தப்பட்ட நிலையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

லாரி ஓட்டுநரின் முதலாளி இந்த பணத்தைச் செலுத்தியதாக ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறை தலைவர் பக்ரி சைனால் அபிடின் கூறினார். 

தனி நபர் உத்தரவாதத்தின் பேரில் 6 ஆயிரம் ரிங்கிட்  பிணைத்தொகையுடன் கூடிய ஜாமின் அளிக்கப்பட்டது. 

முன்னதாக, ஒன்பது சேமப்படை அதிகாரிகளின் மரணத்திற்குக் காரணமானதாக குற்றஞ்சாட்டப்பட்ட 45 வயதான ருடி சுல்கர்னாயின் தனது குற்றத்தை மறுத்து விசாரணை கோரியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset