நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞரின் நம்பிக்கையை வெல்லும் அரசியல்தான் எதிர்காலத்தை முடிவு செய்யும் – நூருல் இசா அன்வார்

புக்கித் மெர்தாஜம்: 

பிகேஆர் கட்சி எதிர்வரும்  பொதுத் தேர்தல் (PRU16)-இல் இளைஞர்களின் ஆதரவை பெற, அவர்களின் மனங்களை கவரக்கூடிய சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் என நூருல் இசா அன்வார் வலியுறுத்தினார்.

“இளைஞர்கள் நண்பர்களின் பேச்சை கேட்கின்றார்கள், அரசியலைத் தவிர்க்கிறார்கள்.இதில் அடங்கியுள்ள 68% இளைஞர்கள் மனதில் அரசியலை விதைக்க, முதலில் நாம் மாறவேண்டும்,” என Jelajah Temu Rapat நிகழ்ச்சியில் நூருல் இசா பேசினார்.

அரசியல் மட்டும் குறியாக கொள்ளமால், சமூக நடவடிக்கைகளை அதிகம் முன்னெடுப்பதன் மூலம் நாம் இளைஞர்களையும் சமுதாயத்தையும் சென்றடைய முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஃபீசி ரம்லிக்கு எதிராக கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் நூருல், 16ஆவது பொதுத் தேர்தல், அடுத்து வரும் மாநிலத் தேர்தல்கள்தான் தமக்கு முக்கியம் எனத் தெரிவித்தார்.

இதனிடையே பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் வாக்களிப்பு 21–24 மே வரை ஜொகூரில் நடைபெறவுள்ளது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset