நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத்தில் புதிய மருத்துவமனை நிர்மாணிக்கப்படும்: மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அக்மால் சலே தகவல் 

பெட்டாலிங் ஜெயா: 

மலாக்கா மாநில மருத்துவமனைக்கு அருகில் மகளிர், குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்று நிர்மாணிக்கப்படும் என்று மாநில வேளான், உணவு உத்தரவாத அமைச்சர் டாக்டர் அக்மால் சலே கூறினார். 

இந்த புதிய மருத்துவமனை அடுத்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2031ஆம் ஆண்டு நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். 

699 மில்லியன் ரிங்கிட் செலவில் மருத்துவமனை நிர்மாணீப்பு இவ்வாண்டு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், NOC நோட்டீஸ் காரணமாக இந்த நிர்மாணிப்பு நடவடிக்கை அடுத்த ஆண்டிற்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 

முன்னதாக, மலாக்கா மாநிலத்தில் குழந்தைகள், பெண்களுக்கான மருத்துவமனை ஒன்று நிர்மாணிப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அதன் அடைவுநிலை என்ன என்று மலாக்கா மாநில எதிர்கட்சி தலைவர் டாக்டர் முஹம்மத் யட்சில் கேள்வி எழுப்பிய நிலையில் டாக்டர் அக்மால் இவ்வாறு பதிலளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset