நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிபிஆர், டிபிகேஎல்  பொது வீடு வாடகைகளுக்கான பாக்கி 70 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது: டத்தோ பண்டார்

கோலாலம்பூர்:

பிபிஆர், டிபிகேஎல் பொது வீடு வாடகைகளுக்கான பாக்கி 70 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ மைமுனா முகமட் ஷெரீப் இனை கூறினார்.

பிபிஆர் எனப்படும் மக்கள் வீடமைப்பு பகுதிகள், டிபிகேஎல் பொது வீடமைப்பு பகுதிகள் ஆகியவை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ளன.

இந்நிலையில் இவ்வீடுகளுக்கான வாடகை நிலுவைத் தொகை இப்போது 70 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

டிபிகேஎல் அதிகார வரம்பில் உள்ள சமூகத்திற்கான வசதிகளின் பராமரிப்பு, மேலாண்மையை நிலுவைத் தொகை பாதித்துள்ளது.

மேலும்  குடிநீர் விநியோகத்தை நிறுத்துதல், அறிவிப்புகளை வெளியிடுதல், நிதி ஆதரவு திட்டங்களை ஏற்பாடு செய்தல்,  குத்தகைதாரர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் பணம் செலுத்தும் திட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட நிலுவைத் தொகையை குறைக்க பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த சேவைகளின் மூலம் வாடகை வருவாயை குடியிருப்பாளர்களுக்குத் திருப்பித் தர இந்த நடவடிக்கை முக்கியமானது.

கோலாலம்பூரில் நடந்த  பிபிஆர் பெஸ்டாரி பாதுகாப்பான நகர சமூக நல்வாழ்வுத் திட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset