
செய்திகள் மலேசியா
மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் உயர் கல்வி பயில பணம் ஒரு சுமையாக இருக்கக் கூடாது: விக்னேஷ்
கோலாலம்பூர்:
மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் உயர் கல்வி பயில பணம் ஒரு சுமையாக இருக்கக் கூடாது.
மலேசிய பியோன் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ண குமார் இதனை தெரிவித்தார்.
மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறையில் உயர் கல்வியைப் பயில விரும்பும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டலை வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பியோன் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பியோன் கல்வி உபகாரச் சம்பள விளக்கக் கூட்டம் நேற்று பெட்டாலிங்ஜெயாவில் நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகமானோர் இதில் கலந்துக் கொண்டனர்.
குறிப்பாக மருத்துவம், அது சார்ந்த துறைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் குறித்து உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 19 பல்கலைக்கழகங்களும் இங்கு முகாமிட்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்கினர்.
ஆக மொத்தத்தில் இந்த வழிக்காட்டல் கருத்தரங்கு அவர்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழிக்காட்டும் நடவடிக்கைகளை பியோன் தொடரும்.
குறிப்பாக மருத்துவம், மருத்துவம் சார்ந்து துறைகளில் பயில பணம் ஒரு சுமையாக இருக்கக் கூடாது. இதுவே பியோன் மலேசியாவின் இலக்கு என்று விக்னேஷ் கிருஷ்ண குமார் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 10:46 am
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
June 1, 2025, 10:07 am
புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்
June 1, 2025, 10:02 am
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm