நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் தேர்தலில் தலைமையை அவதூறு செய்வதுடன் கட்சியை அச்சுறுத்தும் பிரச்சாரங்களை பொறுத்துக் கொள்ள முடியாது: ஃபட்லினா

புக்கிட் மெர்தாஜாம்:

கெஅடிலான் தேர்தலில் தலைமையை அவதூறு செய்வதுடன் கட்சியை அச்சுறுத்தும் பிரச்சாரங்களை பொறுத்துக் கொள்ள முடியாது.

கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவரும் கல்வியமைச்சருமான ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

கெஅடிலானின் 2025 - 2028 காலகட்டத்திற்கான மத்திய அளவிலான தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கான தேர்தல் கடுமையாக உள்ளது.

இக்காலக்கட்டத்தில்  கட்சி ஒழுக்கத்தின் அடிப்படையில் குடும்ப உணர்வில் இந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டப்பட்டு வருகிறது.

அதனால்தான், தலைமையை சிறுமைப்படுத்தும் பிரச்சாரங்கள், நாங்கள் நடத்தும் கூட்ட தலைமையால் எடுக்கப்பட்ட முடிவுகளை சிறுமைப்படுத்தும் பிரச்சாரங்கள், அதே போல் கட்சியை அச்சுறுத்தும் பிரச்சாரங்கள் நடக்க அனுமதிக்கப்படக்கூடாது என்பதைக் காண நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.

நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதாவது ஆரம்பத்திலிருந்தே இது ஒரு குடும்பப் போட்டி என்பதை நினைவூட்டுகிறோம்.

இதில் தலைமையை அவதூறு செய்வதுடன் கட்சியை அச்சுறுத்தும் பிரச்சாரங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset