நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி 

ஹைதரபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் உள்ள குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 

தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியதால் பாதிக்கப்பட்ட பகுதி தீக்கிரையானது. 

இதில் மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஹைதரபாத் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சார்மினார் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset