
செய்திகள் மலேசியா
சபா அம்னோவில் பிரிவினைகள் இல்லை: டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
கோத்தா கினாபாலு:
சபா மாநில அம்னோவில் பிரிவினைகள் எதுவும் இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
சபா மாநிலத்தில் தேசிய முன்னணியும் சபா அம்னோவும் இரு குழுக்களாக செயல்படுவதாக வெளிவந்த தகவலை அஹ்மத் ஸாஹித் ஹமிடி மறுத்தார்.
கட்சி உள்விவகாரங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் சபா மாநில அம்னோ, தேசிய முன்னணி கடந்த பொதுத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது என்று அவர் தெரிவித்தார்.
இரு குழுக்களாக சண்டையிட்டுகொள்வதால் சபா மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
சபா மாநில அரசியலில் புங் மொக்தார் ரடின், அப்துல் ரஹ்மான் என இரு குழுக்கள் இல்லை என்று ஸாஹித் ஹமிடி தெளிவுப்படுத்தினார்.
கூட்டணி தொடர்பான முடிவெடுக்க சபா மாநில அம்னோவிற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக ஸாஹித் ஹமிடி இதற்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm