நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா அம்னோவில் பிரிவினைகள் இல்லை: டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல் 

கோத்தா கினாபாலு: 

சபா மாநில அம்னோவில் பிரிவினைகள் எதுவும் இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார். 

சபா மாநிலத்தில் தேசிய முன்னணியும் சபா அம்னோவும் இரு குழுக்களாக செயல்படுவதாக வெளிவந்த தகவலை அஹ்மத் ஸாஹித் ஹமிடி மறுத்தார். 

கட்சி உள்விவகாரங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் சபா மாநில அம்னோ, தேசிய முன்னணி கடந்த பொதுத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது என்று அவர் தெரிவித்தார். 

இரு குழுக்களாக சண்டையிட்டுகொள்வதால் சபா மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். 

சபா மாநில அரசியலில் புங் மொக்தார் ரடின், அப்துல் ரஹ்மான் என இரு குழுக்கள் இல்லை என்று ஸாஹித் ஹமிடி தெளிவுப்படுத்தினார். 

கூட்டணி தொடர்பான முடிவெடுக்க சபா மாநில அம்னோவிற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக ஸாஹித் ஹமிடி இதற்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset