நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏழாவது மாடியிலிருந்து பாலகன் விழுந்து மரணம்: போலீஸ் தகவல் 

கோலாலம்பூர்: 

ஏழாவது மாடியிலிருந்து கீழு விழுந்து 2 வயது பாலகன் ஒருவன் மரணமடைந்தான்.

இந்த பரிதாப சம்பவம் புத்ராஜெயாவில் நிகழ்ந்ததாக புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் அய்டி ஷாம் மொஹம்மத் கூறினார். 

இன்று மதியம் 2.24 மணிக்கு பாலகன் ஒருவன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக புத்ராஜெயா மருத்துவமனை நிர்வாகம் போலீஸ் புகார் அளித்தது என்று அவர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட பாலகனை அவனது தந்தை புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பாலகன் மீது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பாலகன் மரணமடைந்து விட்டதாக புத்ராஜெயா போலீஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset