நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சித் தேர்தலில் அமானா கட்சி உறுப்பினர்கள் தலையீடு கூடாது: அமானா தலைமை செயலாளர் ஃபைஸ் ஃபட்சில் தகவல் 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சித் தேர்தலில் அமானா கட்சியின் தலைமைத்துவமோ அல்லது உறுப்பினரோ தலையீடு செய்ய கூடாது என்று அமானா கட்சியின் தலைமை செயலாளர் ஃபைஸ் ஃபட்சில் நினைவுறுத்தினார். 

பிகேஆர் கட்சித் தேர்தல் தொடர்பாக எந்தவொரு அறிக்கைகளையும் வெளிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். 

பிகேஆர் கட்சித் தேர்தல்  என்பது அக்கட்சியின் உள்விவகாரமாகும். அதனால் பிகேஆர் கட்சியின் ஜனநாயகத்தை அமானா கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மதிக்க வேண்டும் என்று ஃபைஸ் கேட்டுக்கொண்டார். 

அமானா, பிகேஆர் கட்சியின் ஒற்றுமையை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்பதே அமானா கட்சியின் எதிர்பார்ப்பாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset